Wednesday, November 26, 2008

உண்மையை இப்படியும் சொல்லலாம்..

அன்று, எனக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.. அட என்றுமே எனக்கு பெரிசா வேலை இல்லை... .. டேய் ..எனக்கு ஃபைல் வந்தாகனும் என்று என்னை மிரட்டுறவன் என்ன டெட்லைன் குடுத்து மிரட்டுகிறானோ அதற்கும் 2 நாள் முன் தள்ளி இன்னிக்கு ஃபைல் என் கைக்கு வரவேண்டும் என்று மற்றவர்களை மிரட்டி வேலை வாங்குவதுதான் என் வேலை... மன்னிக்கவும் , என் தொழில் , மறுபடியும் மன்னிக்கவும் ... எங்கள் தொழில் .

அது, இப்படி டாய் டூய் என்று மற்ற ஆட்களை மிரட்டி வேலை வாங்கும் அவசியம் இல்லத அமைதியான வாரம்... எனக்கு பிடிக்காத அமைதி... மனிதன் என்றால் பிரச்சினைகள் சுற்றி சூழ இருக்கணும்.. இதற்கு காரணம் இருக்கிறது... அமைதியான சூழ் நிலையில் இருக்கும் எவனுக்கும் அல்லது யாருக்கும் அல்லது எதற்கும் அதற்கடுத்த நிலையை நோக்கி பயணிக்க தோன்றாது... அமைதியே பெரிதாக தோன்றும்..ஆகவே நம்மை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த எதாவது ஒரு பிரச்சினையோ அல்லது நெருக்கடியோ தேவை...

இப்படிப்பட்ட நெருக்கடி இல்லாத ஒரு நாளன்று தான் ... என் நண்பன் நாரா வை சந்திக்க போனேன்...

சரி ... இதை ஒரு திரைக்கதை மாதிரி சொல்றேன் .. ஸ்க்ரிப்ட் ரைட்ஸ் எனக்கு... சரியா..
********************************************************************************************************
நிஜமாக நடந்த காட்சிகள்

காட்சி 1

இடம் : நாராவின் அலுவலகம் இருக்கும் முக்கு சந்து

பாத்திரங்கள் : நாரா , வா ( எவண்டா இந்த வா… நேர்ல வாடா ஹ ஹ ஹ)

(வா தொலை பேசியில் நாராவிடம் பேசுகிறான்)

வா : எங்க இருக்க, நான் வந்துட்டேன்

நாரா: இங்க தான் இருக்கேன்..

வா: வெங்காயம், அதான் எங்கடா..

நாரா: ஆஃபிஸ்லடா

வா: பிஸியா இருக்கியா

நாரா: இல்ல...

வா: சரி நான் வரேன் ..

காட்சி 2

நாராவின் அலுவலகம்

வா தொலைபேசியில் பேசியபடியே நாராவின் அலுவலகத்துக்குள் நுழைகிறான்..

நாரா: வாடா வா....எப்படி இருக்க ..உன் தொழில் எப்படி இருக்கு..

வா : எங்கள் தொழில் நல்லாவே இருக்கு...

நாரா: எங்கள் தொழிலா.. வேற யாரு...

வா: ஆமா எங்கள் தொழில் தான் .. ஒரு ஆள் நான்... இன்னொரு ஆள் ஒரு பெண் அதுவும் அந்த பெண் யார் என்று தெரியும். நாங்கள் இப்போ பிரிஞ்சு இருக்கலாம்... ஆனா சேருவோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு... சரியா..

நாரா: சாரிடா...

வா: நோ இஷ்யூஸ்...

**************************************************************

மேலே நாங்கள் பேசியவை 100% உண்மை..



இனி, இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்டது என்பதை 99.5 % கற்பனை கலந்து நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறேன்... (அந்த மீதி 0.5% உண்மை ... வா விற்கு பிடித்த வால்பாறையும் தலைக்காவேரியும் )


வா: எங்க கிறிஸ் கானோமெ... எங்க போயிட்டான்

நா: அதை விடு ,எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

வா: கொஞ்சம் பிஸியா இருந்தேன்..

நா; இப்போ... பிஸி இல்ல நீ... நீ பிஸி இல்லனா தனியா ஃப்ரீயா வால்பாறை கூர்க் நு போயிடுவியே.. ஏன் போகலை.... நீ வா தான ... வேற ஆள் இல்லையே

வா: என்னடா இப்படி சொல்ற..

நா; எப்படி சொல்றென்..

வா: அத விடு ... இப்போ நான் ஃப்ரீயா இருக்க நேரத்துல .. என்னோட பழைய கவிதைகள டைப் செய்யனும்…

நா : டைப் செஞ்சு…

வா : இண்டர்னெட்டில் ஏத்தனும்…நாம ரெண்டு பேரும் …இலக்கியவாதி ஆகணும்...

நா: ( அலறலுடன்)..... என்னது நாம ரெண்டு பேரும் .. இலக்கியவாதியா..

வா: ஆமா... விளக்கமா சொல்ல முடியாது , நிறைய காரணம் இருக்கு.. .
.
நா ; என்னடா சொல்லுற...( மொபைல் போன் கத்துகிறது)... டேய் வா... பொண்டாட்டி போன் பண்றா... நான் கிளம்புறேன்...

வா:( கோபத்துடன்) இப்படி பொண்டாட்டிக்கு பயப்படுறல.... உன்ன பார்த்து எல்லாரும் பயப்படனும்னா.. நீ இலக்கியவாதி ஆகுடா....

நா: என்னடா சொல்லுற... பொண்ட்டாட்டி போன் பண்றாடா... நான் போகனும்டா..

வா; ( ஆத்திரத்துடன்) டேய்... உனக்கு பொண்டாட்டிகிட்ட பயமா... இல்ல அவங்க செஞ்ச போன் கிட்ட பயமா...

நா :(குழப்பத்துடன்) தெரிலடா.. அவ குரல கேட்டாலே நடுங்குது...

வா: எனக்கு எல்லாம் தெரிஞ்சிரிச்சு... அவங்க மேல உனக்கு பயம் இல்ல... அவங்க குரல் மேல பயம்.. இந்த பயம் போகனும்னா நீ இலக்கியவாதி ஆகிடு... எல்லா பயமும் போயிடும்

நா : (ஆர்வத்துடன்) நிஜமாவா... இது எல்லாம் நடக்குமா..

வா: நடக்கும்.. (... நானே என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு நாம எவ்வளவு உண்மையா இருந்தும் ... அவ நம்ம புரிஞ்சுக்காம இருக்க என்ன காரணம் என்று தேடிக்கிட்டு இருக்கேன்... இவன் வேற)... ம் ம் ம் ... நடக்கும்டா

நா: சரி நீ சொன்ன மாதிரி நாம இலக்கியவாதி ஆகலாம்... ஆனா எனக்கு உன்னை மாதிரி கவிதை எழுத தெரியாது.. நீ தனியா 10 நாள் கூட தலைக்காவேரில உட்கார்ந்து இந்த தண்ணி எங்க இருந்து வருதுனு ஆராய்ச்சி செய்வ.. ஆட்டம் போடுவ ... எனக்கும் ஆசைதான்.. ஆனா என் பொண்டாட்டி திட்டுவாடா... இலக்கியம் எல்லாம் எனக்கு வேண்டாம்டா

வா: ( கோபத்துடன்)... இங்க பாரு தலைக்காவேரி போலாம்னும் உன்ன கூப்பிடல.. அல்லது கொச்சின் மன்சூன் சேசிங் போகணும்ணு உன்னை கூப்பிடலை... நாம இலக்கியவாதி ஆகணும்... அதுக்குத்தான் இங்க உன்கிட்ட வந்து இருக்கேன்..

நா: அப்பொ செரி... சொல்லு நான் என்ன செய்யனும்

வா: நான் இலக்கியவாதி ஆகிறதா தீர்மானிச்சுட்டேன்... சோ.. நீயும் ஆகிற

நா; ஓ கே ... நானும் ஆகிறேன்... ஆனா எப்படி...

வா : குட் கொஸ்டின்... ஆனா முதல்லில இலக்கியவாதி ஆனா என்ன பலன்னு
நீ தெரிஞ்சுக்கனும்ம்...

நா: என்ன பலன்

வா: உனக்கு கெட்ட வார்த்தை பேச தெரியுமா..

நா: தெரியும்.. ஆனா யாரையும் திட்ட மாட்டேன்

வா; நோ இஷ்யூஸ்… நீ இலக்கியவாதி ஆனா யாரை வேணா திட்டலாம்..

நா: ஏண்டா... சண்டைக்கு வர மாட்டாங்க..

வா: வருவாங்க

நா: அடப்பாவி... பிரச்சினை ஆகுமேடா...

வா; ஆகும், ஆனா பெரிசா போகாது... ஏன்னா நாம திட்ட போற ஆளு .நம்மல மாதிரியே இலக்கியாவதியா ஆகிற ஐடியா ல இருக்கிற ஆளத்தான்..

நா: நம்மள அவன் திட்டினா...

வா ; அவன் திட்டனும். அதுக்காகத்தான நாம அவன திட்டுறோம்....

நா: இப்படி எல்லாம் திட்டு வாங்கிதான் இலக்கியவாதி ஆகனுமா..

வா: பின்ன... நீ பெரிய இலக்கியவாதி ஆகிட்டா யார வேணா திட்டலாம்...

நா; என் பொண்ட்டாட்டிய கூடவா... முடியுமா என்னால

வா: ஆமா,அது மட்டும் இல்ல, உன்கிட்ட இருக்க ஒரு கிழிஞ்ச டவுசர மாட்டிகிட்டு நீ எங்க வேணா போகலாம்.. எவனும் கேவலமா பேச மாட்டான்.. அதுக்கு பதிலா இலக்கியவாதி நாரா செய்த உடைப் புரட்சினு சொல்லுவானுங்க..

நா: இப்பவே கண்ண கட்டுதே... தமிழ் நாட்டில இலக்கியவாதி ஆனா இவ்வ்ளோ பயன் இருக்கா...

வா; இது மட்டும் இல்லடா வெங்காயம் , ....பிளாக், வெப்சைட், ஸ்பான்சர்ஸ் உதவில வெளினாடு போறது அப்புறம் நமக்கு வெளினாடு போக எவன் ஸ்பான்ஸர் செஞ்சானோ அவனயே திட்டறது..... அதுக்கு காரனம் சொல்லி எஸ்கேப் ஆகிறதுனு... ரொம்ப கிளு கிளுப்பா இருக்கும் ...

நா: சரி டா... ஆனா இலக்கியவாதி ஆனா ஃபுல்டைமெ அதுலயே இருக்கணுமா..

வா: அப்படி இல்ல, அதான் இலக்கியவாதியா இருக்கிறதுல உள்ள பியூட்டியே , நீ ஃபுல்டைம் இலக்கியவாதியாவும் இருக்கலாம்… பார்ட் டைம் இலக்கியவாதியாவும் இருக்கலாம்…ஃபுல்டைம் இலக்கியவாதியா இருந்தா எதாவது ஒரு பட்த்துல பிச்சைக்காரன் வேஷம் குடுப்பாங்க…அவ்ளோதான்

நாரா: அது டேஞ்சர்….

வா: அதான் சொல்றேன்.,எப்பவும் பார்ட் டைம் இலக்கியவாதியா இரு.... போஸ்ட் ஆபிஸ், டெலிபோன் டிபார்ட்மெண்ட் இங்க வேலை செஞ்சுகிட்டே... (என்று கூறியபடியே நாரா டக் இன் செய்த சட்டையை வெளியே இழுத்து அவன் தலையை கலைத்து விடுகிறான் )

நா : (பதற்றத்துடன்) என்ன பண்ணற..

வா ; உன்ன ஒரு இலக்கியாவாதி கெட் அப்க்கு கொண்டு வர போறேன்... இனி நீ 5 மாசம் என்னைக் கேட்காம சவரம் செய்ய கூடாது... காடா துணியில் முழங்கால் வரைக்கும் தைச்ச ஒரு சட்டையா தான் நீ போடணும்...

நா; நான் ஏன் அதை செய்யனும்...

வா: இப்ப கேட்ட பாரு ஒரு கேள்வி... அதுவும் இன்னொரு இலக்கியவாதிய பாத்து... நீ 25% தேறிட்ட மாமு...


நா: நான் என்ன கேட்டேன்... நீ என்ன சொல்ற
வா; நீ என்ன கேட்டநு உனக்கே தெரில பாரு நீ 50 % தேறிட்ட மாமு...

( ஆக்ரொஷத்துடன் வா சொல்கிறான்.. கமான் மாமு... )


நா; ( கோபத்துடன்...) டேய்... ****ட... நான் என்ன கேட்கிறேன்... நீ என்ன சொல்ற.. கேட்ட கேள்விக்கு பதில சொல்லுடா.. ********தி .. ****


வா: டேய்... ****ட... நிறுத்துடா... **** மவனே... யார்கிட்ட வெச்சுகிற...


ஒரு ஆரோக்கியமான இலக்கிய விவாதம் நடைபெறுகிறது

***********************************************************************************************
பி கு: இப்படியா தமிழ் இலக்கிய உலகம் இருக்கு என்று நினைக்கும் இலக்கிய உலக அரசியல் பற்றி அறியாதவர்களுக்கு… விஷால் நடிச்ச சண்டைக் கோழி படம் பார்த்து இருப்பிங்க.. அதில் ஒரு வசனம் வரும் … மீரா ஜாஸ்மின் சொல்லுவார்.. தன் அண்ணணிடம்… நீ வேணா குட்டி ரேவதிய கேட்டு பார் என்று.. அதற்கு அந்த அண்ணன் சொல்லுவார்… பேர பாரு குட்டி ரேவதி.. அவளும் அவ மூஞ்சியும் என்று…
குட்டி ரேவதி -- தற்கால தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கிய பெண் கவிஞர்
இந்த படத்தின் வசன கர்த்தா… எஸ்.ராமகிருஷ்ணன் முக்கிய தற்கால தமிழ் இலக்கியவாதி … தட்ஸ் இட்

*****************************************************************************************
உண்மை காட்சில வா மற்றும் அவன் நண்பர் நாரா வருவது சரி.. கற்பனை காட்சியிலயும் ஏன் வா மற்றும் நாரா ஏன் திரும்ப வர்றாங்கனு கேட்கிறீங்களா.. வா வை கேட்க ஆளில்லை.. நாரா , வா என்ன சொன்னாலும் கம்ணு இருப்பான்... அதான் .அடுத்த கதைல அபுதாபி அலுசாம் சிவா மொடி மஸ்தானா உள்ள இழுக்கிறேன்... பொறுமை

Tuesday, November 25, 2008

சேகுவேரா புகைத்த சுருட்டின் வாசம்

இப்போது ,வாய் கிழிய புரட்சி பற்றிப் பேசும் நபர்களின்  டீ ஷர்டில்  வரையப்பட்ட ஒரு கார்ட்டூன் உருவமாகிப் போன  சேகுவேரா, புகைக்க சுருட்டு கிடைக்காத  சமயங்களில் இந்த இசையைத் தான் கேட்டு ஓய்வெடுத்திருக்க கூடும் ... பொலீவியக் காட்டில் இருந்து ஒலிக்கும் இசை இது...  இந்த அமைதியான இசைக்குப் பின்னே ,இன்னமும் ஒரு மாபெரும் புரட்சி ஒளிந்து இருக்க கூடும்...  ஆழ்ந்து கேட்டால்  இந்த இசையில் சேகுவேரா புகைத்த சுருட்டின் வாசம் தெரியும்..





Sunday, November 9, 2008

புதுசா ...இளசா ...


உலகம் ...குலுங்க ...குலுங்க .. புதுசா நான் பதிவை போட
திட்டு.. எகிற.. எகிற ..சண்டையிட்டு உருள ...உருள ...
இந்த மண்ணு மணக்கிற சண்டையில நாங்க தனியா ஜெயிச்சு நிப்போம்
வந்தேன் .......வந்தேன்.. வந்தேன் ... வரக் கூடாத இடத்துக்குத்தான்