Saturday, February 14, 2009

தேவதைகளின் இறகு

இருள் நிறைந்த கிணறொன்று
தேவதைகளால் நிறைந்து வழிவதாகவும்
நடந்து வந்த பாதையில்
கிடந்ததாய் சொல்லி
தேவதைகளின் இறகொன்றை
கொடுத்துச் சென்றாள்...

நிலவிழந்த இரவில்
தென்னை மரங்கள் அடர்ந்த
அக்கிராமத்து வீதியில் சில கிழவர்கள்
அதைப் போன்ற இறகை
தலைக்கு வைத்து
உறங்குவதைக் கண்டேன்...