Saturday, February 14, 2009

தீரும் காலம்.....

இருள் தன்னோடு எடுத்து வந்து
என்னுள் வைத்தது

அழுத்தம் தாங்காமல்
கனவுகள் கிழிந்து போய் அறை எங்கும்
சுவாசிக்கப்பட்ட காற்றாய்
நிரம்பிக் கிடக்கிறது...

நடு நிசி ஆந்தையின் அலறலாய்
சுமை தாங்கா முனகலும் கொஞ்சம் கேட்கும்

பெரு வெளியில்
என் இருப்பை
அதுவே
உறுதிப்படுத்துகிறது...

தன்னைத் தானே தின்னும்
சக்கரத்தின்
ஒரு ஓரத்தில் நானும்

தின்று முடியும் போது
இதுவும் தீரும்....